காதல் ஒரு வழி பாதை பயணம் பாடல் வரிகள் 

Movie Name  Kilinjalgal
திரைப்பட பெயர் கிளிஞ்சல்கள்
Music T. Rajendar
Lyricist T. Rajendar
Singer P. Jayachandran
Year 1981

ஆண் : கிளையில்லா மரங்களில்
நிழல் தேடும் மனங்களே
அழிவில்லா காதலில்
அழுகின்ற மலர்களே……
ஆ……அழுகின்ற மலர்களே……

ஆண் : காதல் ஒரு வழி பாதை பயணம்
அதில் நுழைவது என்பது சுலபம்
பின்பு திரும்பிட நினைப்பது பாவம்
பின்பு திரும்பிட நினைப்பது பாவம்
அது ஆற்றிட முடியா காயம்
காதல் ஆற்றிட முடியா காயம்…….

ஆண் : காதல் ஒரு வழி பாதை பயணம்
அதில் நுழைவது என்பது சுலபம்

ஆண் : மேகங்கள் போட்டிடும் கோலம்
அது காற்றினில் களைந்திட சோகம்
மேகங்கள் போட்டிடும் கோலம்
அது காற்றினில் களைந்திட சோகம்

ஆண் : காலை கதிரவன் அழித்திடும் பனிபோல்
காலை கதிரவன் அழித்திடும் பனிபோல்
காதல் விதியவன் சிதைத்திடும் கனவோ
காதல் விதியவன் சிதைத்திடும் கனவோ

ஆண் : காதல் ஒரு வழி பாதை பயணம்
அதில் நுழைவது என்பது சுலபம்

ஆண் : கோடையில் காய்ந்திடும் நதிகள்
எந்த நிலையிலும் காயாத விழிகள்
கோடையில் காய்ந்திடும் நதிகள்
எந்த நிலையிலும் காயாத விழிகள்

ஆண் : கதை சாகின்ற வரையும் தொடரும்
கதை சாகின்ற வரையும் தொடரும்
கட்டை வேகின்ற போதும் மலரும்
கட்டை வேகின்ற போதும் மலரும்

ஆண் : காதல் ஒரு வழி பாதை பயணம்
அதில் நுழைவது என்பது சுலபம்
பின்பு திரும்பிட நினைப்பது பாவம்
பின்பு திரும்பிட நினைப்பது பாவம்
அது ஆற்றிட முடியா காயம்
காதல் ஆற்றிட முடியா காயம்…….

Tags:  Kilinjalgal Kilinjalgal Songs Lyrics Kilinjalgal Lyrics,  Kilinjalgal Lyrics in Tamil Kilinjalgal Tamil Lyrics கிளிஞ்சல்கள்,  கிளிஞ்சல்கள் பாடல் வரிகள்,  கிளிஞ்சல்கள் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *