நியூயார்க் நகரம் பாடல் வரிகள்
Movie Name | Sillunu Oru Kadhal |
---|---|
திரைப்பட பெயர் | சில்லுனு ஒரு காதல் |
Music | A. R. Rahman |
Lyricist | Vaali |
Singer | A. R. Rahman |
Year | 2006 |
ஆண் : நியூயார்க் நகரம்
உறங்கும் நேரம் தனிமை
அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும்
கரையில் நடந்தது
ஆண் : நான்கு கண்ணாடி
சுவர்களுக்குள்ளே நானும்
மெழுகுவர்த்தியும் தனிமை
தனிமையோ கொடுமை
கொடுமையோ
ஆண் : நியூயார்க் நகரம்
உறங்கும் நேரம் தனிமை
அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும்
கரையில் நடந்தது
ஆண் : நான்கு கண்ணாடி
சுவர்களுக்குள்ளே நானும்
மெழுகுவர்த்தியும் தனிமை
தனிமையோ தனிமை
தனிமையோ கொடுமை
கொடுமையோ
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ……
ஆண் : பேச்செல்லாம்
தாலாட்டுப் போல என்னை
உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து
காலை காபி கொடுக்க நீ இல்லை
ஆண் : விழியில் விழும்
தூசி தன்னை எடுக்க நீ
இங்கு இல்லை மனதில்
எழும் குழப்பம் தன்னை
தீர்க்க நீ இங்கே இல்லை
ஆண் : நான் இங்கே
நீயும் அங்கே இந்த
தனிமையில் நிமிஷங்கள்
வருஷம் ஆனதேனோ
ஆண் : வான் இங்கே
நீலம் அங்கே இந்த
உவமைக்கு இருவரும்
விளக்கமானதேனோ ஓ ஓ
பெண் : நியூயார்க் நகரம்
உறங்கும் நேரம் தனிமை
அடர்ந்தது பனியும் படர்ந்தது
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ……
ஆண் : நாட்குறிப்பில் நூறு
தடவை உந்தன் பெயரை
எழுதும் என் பேனா எழுதியதும்
எறும்பு மொய்க்க பெயரும்
ஆனதென்ன தேனா
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ……
ஆண் : சில்லென்று பூமி
இருந்தும் இந்த தருணத்தில்
குளிர்காலம் கோடை
ஆனதேனோ
ஆண் : வா அன்பே நீயும்
வந்தால் செந்தணல் கூட
பனிகட்டி போல மாறுமே
யே யே யே யே
பெண் : நியூயார்க் நகரம்
உறங்கும் நேரம் தனிமை
அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும்
கரையில் நடந்தது
ஆண் : நான்கு கண்ணாடி
சுவர்களுக்குள்ளே நானும்
மெழுகுவர்த்தியும் தனிமை
தனிமையோ தனிமை
தனிமையோ கொடுமை
கொடுமையோ